வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்ற நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த நிலையில் இவர் தனது ட்விட்டரில் பதிவு பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு புத்தகத்தை விரித்து அதில் மயிலிறகு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இதற்குள் அடங்கியுள்ள ஒரு டைட்டிலை கெஸ் பண்ணுங்க என பகிர்ந்து இருக்கின்றார். மேலும் ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள் இருக்கும் திரைப்படத்தோட தலைப்பை கண்டு பிடிங்க பார்க்கலாம். மேலும் தலைப்பை கூறுபவர்களுக்கு புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு பலரும் 53 ஆம் பக்கம், புத்தகத்தில் ஒரு மயிலிறகு என பலரும் தங்களுக்கு தோன்றிய தலைப்புகளை பதிவு செய்து வருகின்றார்கள். இதை அடுத்து பார்த்திபன் பகிர்ந்திருக்கும் மற்றொரு பதிவில் என் தலைப்புக்கு பக்கம் பக்கமாய் மிகப் பக்கமாய் 51 ஆம் பக்கம், 52 ஆம் பக்கம், 53 ஆம் பக்கம் என நெருங்கி விட்ட தலைப்புகள். ஆனால் கதைக்குள் பொருத்தி நான் நிறுத்திய தலைப்புடன் உங்களின் யோகம் பொருந்துகின்றதா என்பதை பார்த்து நாளை தலைப்பை அறிவிப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். மேலும் என் தலைப்பை யூகிக்கும் ஒவ்வொருவருக்கும் அழகான புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்ததற்கு சிலர் புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக் கொள்ளவா முடியும் என தெரிவித்திருந்தனர். இதற்கு பார்த்திபன் கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு கட்டிக்கிட்டவர்களுக்கு கொடுங்க இல்ல கடிக்க போறவங்களுக்கு கொடுங்க என பதில் தந்துள்ளார்.