கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர், முன்னாள் மாநில பொதுச் செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர் என பலர் பங்கேற்று பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாளராக பணிபுரியும் அமுலு என்பவரை கண்டித்தும், பொது வருங்கால வைப்பு நிதி 5 வருடங்களாக வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தேக்கநிலை ஊதிய உயர்வு வழங்கியதை தணிக்கை தடை காரணம் காட்டி பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும், ஊதிய குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அமைப்பாளர்களுக்கு ஆண்டு ஓய்வு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.