தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த வீடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் விற்பனை செய்த பணம் 30 ஆயிரம் ரூபாய், முன்பணம் 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை டைமன்ராஜ் மோசடி செய்துள்ளார்.

இதேபோல் பாக்யராஜும் வசூல் பணம் 35 ஆயிரம் ரூபாய், முன்பணம் 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சஜன் காவல் நிலையத்தில் பெயர் வைத்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்யராஜை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் டைமண்ட் ராஜை தேடி வருகின்றனர்.