கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது.

இதனையடுத்து வண்டுகள் கடித்து அதே பகுதியில் வசிக்கும் கர்ப்பிணியான ஆர்த்தி, வளர்மதி, புவனேஸ்வரி, கமலா, வனிதா உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.