கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு பணம் எடுக்க தெரியாது. இதனால் அருகில் இருந்த ஒருவரிடம் தனது ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை தெரிவித்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார்.

அந்த நபர் உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பினார். சிறிது நேரத்தில் கனிமொழியின் வங்கி கணக்கிலிருந்து 52 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பணம் எடுப்பது போல உதவி செய்து மோசடி செய்த திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த குமரன் என்பவரை கைது செய்தனர்.