பறவைகளை மட்டுமே தாக்கும் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் தற்போது பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது குழந்தைக்கு பறவை காய்ச்சல் தாக்கியது கண்டறியப்பட்டது.

காய்ச்சல் மற்றும் கடுமையான இரும்பலால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை ராஜேந்திர மருத்துவர் அறிவியல் கழகத்தில் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.