மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்கு பரிசாக அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் நந்தகுமார் என்பவர் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பதையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து மாநில உள்துறை மந்திரிக்கு அனுப்பி உள்ளார்.