இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் அறிவித்தார். செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில் தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து இந்த பாடத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியை பாடல் மட்டும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் குறித்த பாடமும் இடம்பெறவுள்ளது. தற்போது சங்க இலக்கியங்களுக்கு கருணாநிதி ஆற்றிய பாடங்கள் குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது