தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை என்று நீண்ட நாட்களாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் டெல்லி சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இபிஎஸ் உடன் எஸ் பி வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தமிழ்நாடு அரசியல் சூழல்,அண்ணாமலை விவகாரம் மற்றும் பி டி ஆர் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இனி தேவையில்லாமல் அதிமுக குறித்து பேசக்கூடாது என அண்ணாமலைக்கு கட்டளையிட அதிமுக தரப்பு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.