தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரிடம் மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்கரவர்த்தி என்ற இளைஞர் இவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பவுன் நகையை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருவிடைமருதூரில் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில், 12ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள அவர், இன்ஜினியர் என கூறிக்கொண்டு இரண்டாம் திருமணம் செய்ய பதிவு செய்யும் பெண்களை மட்டும் குறிவைத்து திருமணம் செய்து வந்துள்ளார்.

பின்னர் அவர்களை ஏமாற்றிவிட்டு பணம் நகைகை திருடிக்கொண்டு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவரின் செல்ஃபோனை சோதனை செய்ததில் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.