சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை (பிப்ரவரி 3ம் தேதி, 4ம் தேதி, சனி, ஞாயிறு நீங்கலாக) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நேர்முக தேர்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.