பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை நாளாகும். 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கும் வங்கிகளுக்கு விடுமுறை.

அதேசமயம் மார்ச் 29 புனித வெள்ளியும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இந்த மாதத்தின் கடைசி பத்து நாட்களில் அதாவது மார்ச் 22 முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மொத்தம் எட்டு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.