இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு UIDAI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ஆதார் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க UIDAI ஆனது ஆதார் மித்ரா என்ற புதிய அம்ச சாட்போட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஆதார் பிவிசி கார்டு நிலை, பதிவு மற்றும் புதுப்பிப்பு நிலை, பதிவு மைய இடம், பதிவு செய்தல் மற்றும் புகார்களின் நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்.