தமிழகத்தில்  வருடந்தோறும் முறைசார் பள்ளிகளுக்கு செல்லாமல் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வுகள் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான  தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆக.7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது செப்டம்பர் 29ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக  தேர்வு  முடிவுகளை அறியலாம்.