ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் 7 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைதானார். இவ்வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் சந்தேகத்தின் படி பலரை பிடித்து விசாரித்தனர். அதன்படி சிறுமியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் தந்தை முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அவரே தன் மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கொட்டகையில் உடலை வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. அதன்பின் அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.