தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் ஜெகபதிபாபு. இவர் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, என் வாழ்க்கையில் எனக்கு சினிமா தவிர வேறு எதுவுமே தெரியாது. நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. நான் சாகசம் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தபோது எனக்கு 7 நாட்களாக அவர்கள் சாப்பாடு தரவில்லை. சாப்பிட்டியா என்று கூட கேட்கவில்லை. என்னுடைய நிலைமையை பார்த்து லைட் மேன் கண்ணீர் வடித்தார்.

அந்த அவமானம் என் வாழ்க்கையில் நல்ல பாடமாக இருந்ததால் பிற மொழிகளில் நடித்து வந்தால் தான் இங்கு மதிப்பு கூடும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் என்னுடைய சிறிய மகளிடம் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று கூறினேன். எனக்கு திருமணத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ஜெகபதி பாபு நடிகர் விஜய்க்கு வில்லனாக பைரவா, ரஜினியின் லிங்கா, தல அஜித்தின் விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாக ஆகும்.