தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் காஷ்மீரில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் திடீரென இணையத்தில் கசித்துள்ளது. இது படக்குழு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னறிவிப்பு இன்றி வீடியோவை யாராவது பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டக்குழு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட யாருமே செல்போன் பயன்படுத்தக் கூடாது என தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்திற்கு வருபவர்களிடம் செல்போன் மற்றும் கேமரா ஏதேனும் இருக்கிறதா என்று அவர்களிடம் சோதனை நடத்திய பிறகே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப் படுகிறார்கள். மேலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் பட குழு தற்போது இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.