கோவையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்த நிலையில் அவரின் காலில் விழுந்து தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மனைவி உயிரிழந்து விட்ட நிலையில் தன்னுடைய இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வசதியாக அவர் தேனிக்கு பணி மாறுதல் கேட்டிருந்தார்.

இந்நிலையில் பணி மாறுதல் கோரி ஆறு மாத குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை நிரந்தர ஒரு வழி மாறுதல் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.