திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதாகும் பார்த்திபன் இன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.