பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் இறந்த குழந்தையின் சடலமான ஒரு எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேனிலா என்ற 81 வயதாகும் மூதாட்டியின் வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. அவர் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார். ஆனால் சமீபத்தில் அவருக்கு அதிகமான வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவரின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது இறந்த குழந்தை ஒன்றின் சடலம் அவற்றின் வயிற்றில் இருந்துள்ளது. இந்த கருவை மருத்துவ முறையில் ஸ்டோன் பேபி என்று குறிப்பிடப்படுகிறது. இவருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே உருவாகியுள்ளது. அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் இருந்த ஸ்டோன் பேபி நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக அந்த மூதாட்டியும் உயிரிழந்தார்.