கஜகஸ்தான் நாட்டில் கலாச்சி கிராம மக்கள் வித்தியாசமான நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவருமே கும்பகர்ணனைப் போல தூங்குகின்றனர். இவர்கள் ஒருமுறை தூங்கினால் எழுந்திரிக்க ஒரு வாரம் ஆகிறது. இவர்கள் தூங்கினால் எழுப்புவதும் கடினம்.

அந்த கிராமத்தின் அருகே யுரேனிய சுரங்கங்கள் இருப்பதால், தண்ணீரில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இந்த நீரை குடிப்பதே பிரச்னைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.