இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6000 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. அதன்படி இன்று இந்தியா முழுவதும் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு நாளில் 1801 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32814 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் தாக்கத்தை குறைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதால் இன்று கொரோனா பரவல் தொற்று குறைந்துள்ளது.