இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக உத்திரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பகல் நேரங்களில் கூட வெப்ப அலை வீசும்.

அதன் பிறகு ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 10-ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.