இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவராகவும் இருப்பவர் அமைச்சர் பி.கே சேகர் பாபு. இவர் நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

அதாவது வேளச்சேரியில் 100 அடி புறவழிச் சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு பகுதியை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூரில் 3.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பது தொடர்பாகவும் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 50 இடங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு விரைவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.