தமிழகத்தில் கழிவு நீர் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதான சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானிடத்திற்கே கலங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை 4 மாதங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.