ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த லுலு குரூப் தற்போது இந்தியாவின் சிறு சிறு நகரங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிக பிரம்மாண்டமான லூலு மால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை அதிகமாக கவர வேண்டும் என்பதற்காக கேரள மாநிலத்தில் லூலு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 9ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தி எலக்ட்ரானிக் பொருட்களை 50 சதவீதம் வரையில் தள்ளுபடி வாங்க முடியும். இதேபோன்று பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அடுத்தவரும் நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமேசான்,flipkart மற்றும் மீசை உள்ளிட்ட பல நிறுவனங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில் அதற்கு போட்டியாக லுலு நிறுவனத்தின் சலுகைகளும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.