நடிகர் சிம்புவின் பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் சிம்பு  நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார் என  தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அவரின் 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் சிம்புவுக்கு 50வது படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  சிம்பு தனது 50வது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது அவரின்  ரசிகர்களை மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.