ஆஸ்கர் தேர்வு குழுவில் இயக்குநர் மணிரத்னம் இடம்பிடித்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 396 பேரில்  மணிரத்னமும் இடம்பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும், தி எலிபேண்ட் விஸ்பரரஸ் குறும்படத்திற்காக இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.