திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு ஆயக்குடியில் டெய்லரான பிரபு என்பது வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு வேலை நிமித்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரத்தில் இருக்கும் சாத்தையன் கோவில் வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். கடந்த 28- ஆம் தேதி இரவு நேரத்தில் லோகேஸ்வரன் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு திடீரென சிறுவனை கடித்தது.

இதனால் அலறி துடித்த சிறுவன் தனது தாயிடம் பாம்பு கடித்ததாக தெரிவித்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியா தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.