கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் கடையில் பிளஸ்-2 வரை படித்து முடித்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளரின் மகனான கதிரேசன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்து பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கதிரேசன் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அந்த பகுதியில் இருக்கும் ஒரு துணிக்கடையில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கதிரேசன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியே சென்ற கதிரேசன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கதிரேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.