வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.