திமுக மாநாட்டில் பேசிய TKS இளங்கோவன், மாண்புமிகு தம்பி உதயநிதி அவர்களே…  இன்னும் கால் நூற்றாண்டிற்கு மேலாக நான் மாநாடுகளிலே பேசுகிற வாய்ப்பை தாங்கள் தருவீர்கள்.  70 வயது தான் எனக்கு ஆகிறது. இன்னும் 25 ஆண்டு காலம் நான் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.  நீங்களும் மாநாடுகள் நிறைய நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. ஒன்றை சொல்லி விடைபெறுகிறேன்….  ஆட்சி கட்டிலில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

பதவியேற்ற ஓராண்டு காலத்திலே ஸ்போர்ட்ஸ் ஹப்  என்று சொல்லக்கூடிய அளவிற்கு விளையாட்டுத் துறையின் உடைய மையமாக உருவாக்கியிருக்கிறீர்கள். கட்சி ஐந்தாண்டு காலத்திலே இளைஞர் அணி பொறுப்பேற்று  300க்கும்  மேற்பட்ட இடங்களில் 5 லட்சம் இளைஞர்களை உருவாக்கி,  லட்சோப லட்ச இளைஞர்கள் அணிவகுக்கக்கூடிய அந்த கட்சி பொறுப்பிலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள்.

ஆனால் எங்களுக்கு என்ன பெருமை தெரியுமா? மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களே…. இந்த இரண்டையும் காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி சனாதனம் என்று சொல்லை தூக்கி எறிவதற்காக….  அந்த மாநாட்டிலே நீங்கள் ஆற்றிய உரைக்குப் பிறகு,  உங்களிடத்தில் ஒருவன் கேள்வி கேட்கிறான்.  தயவுசெய்து இந்த வார்த்தையை திரும்ப பெறுவீர்கள் என்று…. என்ன சொன்னீர்கள் ? யாரைப் பார்த்து கேட்கிறாய். நான் கலைஞரின் பேரப்பிள்ளை தலைவரின் வீரப்பிள்ளை என்னைப் பார்த்தா  இதை கேட்குறீர்கள் என்று சொன்னீர்களே…  அந்த லட்சியத்தின் உறுதிக்காக உங்களை தலைவணங்கி வாழ்த்தி பாராட்டி விடைபெறுகிறேன்.