தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்ற போது காரும், கல்லூரி வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கல்லூரி வேனில் வந்த மாணவிகளான திவ்யா(22), ஜோதி(23) டிரைவர் பிரவீன்(30), காரில் வந்த சண்முகம்(46), திவ்ய பிரியா(26) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.