விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் கிழக்குத் தெருவில் சோலைராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சோலைராஜன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோலை ராஜனின் மனைவி தனது மகன் ஜெனார்த்தனனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஜெனார்த்தனன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தந்தையை தேடி சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டு பகுதியில் ஆற்றுக்கிடங்கில் மர்மமான முறையில் சோலைராஜன் இறந்து கிடந்ததை கண்டு ஜெனார்த்தனன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.