அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலையூர் நோக்கி சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ் ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ் அவருடன் வந்த சூர்யா, மற்றொறு மோட்டார் சைக்கிளில் வந்த சிந்தாமணி, அவரது ஒரு வயது முதல் அட்சயா, மனைவி அசோதை ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.