சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியில் லோகேஸ்வரன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் நண்பர்களுடன் அசோக் நகர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லோகேஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் லோகேஸ்வரனுக்கு என்ன ஆனது என அனைவரும் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.