உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன் பூரை சேர்ந்த ஐந்து வயது குழந்தை காமினி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தாயின் அருகே செல்போனை கையில் வைத்துக் கொண்டு படுத்திருந்த சிறுமி திடீரென செல்போனை தவற விட்டு மயங்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.