LIC நிறுவனமானது ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய திட்டம் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்த மொஹந்தியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இன்று முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

இது ஒரு தனிநபர் சேமிப்பு திட்டத்துடன் கூடிய பங்குச்சந்தை சாராத ஓய்வூதிய திட்டம் . இந்த திட்டத்தின் மூலமாக 20 வயது முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் பயன் பெறலாம். வயதில் மூத்த பாலிசிதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய வசதி உட்பட பல வகையான சிறப்பு அம்சங்களும் இந்த திட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.