தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் http://trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.