அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கை மார்ச் 22 ஆம் தேதியே விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.