தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூணாகிராமத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் குடும்ப நிகழ்ச்சிக்காக சிலர் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு உள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே சேதுபாவாசத்திரம் மனோraa அருகே சென்ற போது விபத்தில் சிக்கி பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

அந்த விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுரை வழங்கி உள்ளேன். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும் கடுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.