தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். கடந்த 13-ஆம் தேதி சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே தங்களது மகள் காணாமல் போனதாக சிறுமியின் பெற்ற பெரிய குளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிவசங்கர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு தேனி அருகே தங்கி இருந்தது தெரியவந்தது. நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டானர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் சிவசங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.