தேனி மாவட்டத்திலுள்ள தி.சேடப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள பைக்காரா காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அஜித் குமாரை தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.