கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஆட்டோ கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை முருகவேல் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் வீரசோழபுரம் பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஆட்டோவை முந்தி செல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஆட்டோ மீது மோதியதால் ஆட்டோ ஓட்டுனர் முருகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த தருண், மல்லிகா, பிரேம்குமார் உள்ளிட்ட 9 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.