திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து கிராமமான ஆண்டார் தோப்பு பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால் நான்கு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு கன்றுக்குட்டியும் படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின்விநியோகத்தை துண்டித்தனர். இதனால் பல மாடுகள் உயிர் தப்பியது. இதனை தொடர்ந்து மின் கம்பிகள் சரி செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.