திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து கிராமமான ஆண்டார் தோப்பு பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால் நான்கு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு கன்றுக்குட்டியும் படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின்விநியோகத்தை துண்டித்தனர். இதனால் பல மாடுகள் உயிர் தப்பியது. இதனை தொடர்ந்து மின் கம்பிகள் சரி செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் கம்பி அறுந்து 4 மாடுகள் பலி…. உடனடி நடவடிக்கையால் தப்பிய உயிர்கள்…!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more