கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆழியாறு அணைக்கு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். இந்நிலையில் ஒரு பெண் தனது 4 குழந்தைகளுடன் அழுது கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் மூதாட்டி ஒருவர் என்ன பிரச்சனை என கேட்டார். அதற்கு கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி போலீsaaருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு குழந்தையை கணவர் விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது கணவரை அழைத்து கண்டித்தனர். இதனால் கோபத்தில் தினமும் குடித்துவிட்டு அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்வதற்காக பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வந்தது தெரியவந்தது. அந்தப் பெண் மற்றும் அவரது குழந்தைகளை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.