கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வஞ்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு 5 பேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கடந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோ டிரைவர் ஏழுமலை, கேபிள் ஆபரேட்டர் கருப்புசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.