பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அது சில நாட்களில் பழுதடைந்து விடும். ஆனால் உலகில் பழுதடையாத ஒரே உணவுப் பொருள் தேன் மட்டும்தான். தேன் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. தேனை தானும் கெடாது தன்னை சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று கூறுவார்கள். இதனால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் இது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் தேன் ஏன் பழுதடைவதில்லை என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே தேன் என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுவை மனம் மாறாமல் புதிது போல இருக்கும். தேனீக்கள் பூக்களில் இருந்து எடுக்கும் வளவளப்பான மற்றும் இனிப்பான பொருளைக் கொண்டே தேனை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு தேனீக்கள் சேகரிக்கும் தேனில் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். தண்ணீர் போதிய அளவு இல்லாத போது அந்த இடத்தில் பாக்டீரியாக்களால் பல்கி பெருக முடியாது. இதனால் தேனில் பாக்டீரியாவால் வாழ முடிவதில்லை. பாக்டீரியா பெருகாத பட்சத்தில் உணவு பழுதடையாது. அதனால் தான் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கிறது.

அதே சமயம் தேனீக்கள் தேனை சேகரிக்கும் போதே நுண்ணுயிர் எதிர்ப்பி ஒன்றை தேனில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் 3000 ஆண்டுகளுக்கு மேல் தேன் பழுதடையாமல் புதிது போல இருக்கின்றது. ஆனால் தற்போது சந்தைகளில் விற்பனையாகும் தேன் பாட்டில்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கான காரணம் விற்பனை தந்திரம் மட்டுமே ஆகும். அல்லது அது சுத்தமான தேனாக இருக்காது. உண்மையில் சுத்தமான தேன் பழுதடைவதில்லை, காலாவதியும் ஆவாது. அந்த வகையில் கிராமப்புறங்களில் தேன் கூடுகளில் இருந்து எடுக்கப்படும் தேன் மட்டுமே சுத்தமானது.