கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட்(43) மற்றும் மோகன்(75) என்பது தெரியவந்தது. இருவரும் மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.