கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.

இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஷ்ணுகாந்தை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.